டிக்கிலோனா படம் குறித்து நடிகர் ஆர்யா படத்தின் ப்ரீமியர் ஷோ-வில் பேசியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.
வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அந்த ப்ரீமியர் ஷோவை காண நடிகர் சிலம்பரசன், யுவன் சங்கர் ராஜா, ஆர்யா, யோகி பாபு, விஷ்ணு விஷால், ஷிரின் காஞ்ச்வாலா, வைபவ், ஆனந்த் ராஜ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில், படத்தை பார்த்த ஆர்யா கூறியதாவது ” படம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஜாலியாக கொண்டு போயிருக்காரு நம்ம இயக்குனர் கார்த்திக் யோகி. சந்தானம் எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார். படத்தில் அவருடைய ஸ்டைல், ரொமாண்டிக், காமெடி, எல்லாமே அருமையாக செய்துள்ளார். படத்தின் வசனம் மிகவும் அருமையாக உள்ளது. சந்தானத்தின் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…