டிக்கிலோனா படம் குறித்து நடிகர் ஆர்யா படத்தின் ப்ரீமியர் ஷோ-வில் பேசியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.
வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அந்த ப்ரீமியர் ஷோவை காண நடிகர் சிலம்பரசன், யுவன் சங்கர் ராஜா, ஆர்யா, யோகி பாபு, விஷ்ணு விஷால், ஷிரின் காஞ்ச்வாலா, வைபவ், ஆனந்த் ராஜ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில், படத்தை பார்த்த ஆர்யா கூறியதாவது ” படம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஜாலியாக கொண்டு போயிருக்காரு நம்ம இயக்குனர் கார்த்திக் யோகி. சந்தானம் எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார். படத்தில் அவருடைய ஸ்டைல், ரொமாண்டிக், காமெடி, எல்லாமே அருமையாக செய்துள்ளார். படத்தின் வசனம் மிகவும் அருமையாக உள்ளது. சந்தானத்தின் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…