ஜப்பான் ஓபன் பாட்மின்டன் : சிந்து பங்கேற்பு, சாய்னா, சாய் பிரணீத் விலகல்…!

Default Image

ஜப்பான் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சிந்து பங்கேற்கிறார். அதே நேரத்தில் சாய்னா, சாய் பிரணீத் ஆகியோர் விலகி உள்ளனர். டோக்கியோ நகரில் ஜப்பான் ஓபன் போட்டிகள் செவ்வாய்கிழமை தொடங்குகின்றன. ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற புத்துணர்வோடு சிந்து இதில் கலந்து ஆள்கிறார்.

ஏற்கனவே அவர் நடப்பாண்டு காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி வென்றுள்ளார். ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தொடரும் தோல்வி கதையை மாற்றும் முனைப்பில் சிந்து உள்ளார். ஜப்பானின் சாயாகா டக்ககாசியை எதிர்கொள்கிறார். காலிலிருத்தியில் முன்னாள் உலக சாம்பியன் கரோலினா அல்லது ஜப்பானின் அகேன் யமகுச்சியுடன் மோதுவாரெனத் தெரிகிறது.

அதே நேரத்தில் சாய்னா விலகி விட்டார். ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய், சமீர் வரமா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆசிய போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் எந்த பதக்கமும் இன்று வெறுங்கையுடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மற்றோரு முன்னணி வீரரான சாய் பிரணீத் விலகி விட்டார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக-சிரவிக் செட்டி, மனு அத்ரி-சுமித்ர்ட்டி ஆகிகியோர் பங்கேற்கின்றனர். மகளீர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கியும், கலப்பு பிரிவில் பிரணவ்-சிக்கி, சாத்விக-அஸ்வினி பங்கேற்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்