சோமாலியாவில் புயல் 15 பேர் பலி உலக நாடுகளிடம் உதவிகளை கோருகிறது ஐ.நா..!

Default Image
கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் புயல் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோமாலியா அரசு அவசரகால உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் நாட்டின் பல சாலைகள் சேதம் அடைந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.Image result for சோமாலியாவில் புயல்
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில்  சோமாலியாவில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பாதுகாப்பான மாற்று இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்நாட்டின் விவசாய நிலங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
ஏற்கனவே, கடும் வறட்சியால் சோமாலியா பாதிக்கப்பட்டிருந்ததால், 2018-ம் ஆண்டுக்கான நிவாரண உதவியாக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்கள் கோரியிருந்தனர். அதில், 24 சதவிகித தொகை மட்டுமே நிவாரண உதவியாக வந்து சேர்ந்தது.
இந்நிலையில், தற்போது வெள்ளம் உள்ளிட்ட கடும் பாதிப்புக்களை சோமாலியா சந்தித்துள்ளதால் உடனடி நிவாரண நிதியாக சுமார் 80 மில்லியன் டாலர் தொகையை ஐநா சபை மற்றும் சோமாலியா அரசு உலக நாடுகளிடம் கேட்டு முறையிட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்