சானியா மிர்சா-ஷோயப் மாலிக் குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை மறுப்பு…!!

Default Image

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கிரிக்கெட் ஸ்டார் ஷோயப் மாலிக் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தைக்கு இஷான் மிர்சா-மாலிக் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இஷான் என்றால் கடவுளின் பரிசு என்று பொருளாம்.  ஹைதராபாத்தின் ரெயின்போ மருத்துவமனையில் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே உருது நியூஸ்.துனியா.டிவி என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் பெடரல் விசாரணை அமைப்பை (FIA)மேற்கோள் காட்டி, இந்தியக் குடிமகளுக்கு, அவரது பாஸ்போர்ட், மற்றும் பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டங்களின் படி பாகிஸ்தான் குடியுரிமை அளிக்க முடியாது.  இரட்டைக் குடியுரிமை  உடன்படிக்கைகளை பாகிஸ்தான் 19 நாடுகளுடன் கொண்டுள்ளது,  ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுடன் அத்தகைய உடன்படிக்கை இல்லை.

மேலும் ஷோயப் மாலிக்கைத் திருமணம் செய்து கொண்ட பிறகு சானியா மிர்சா தன் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை.  செப்டம்பர் மாதம் ஷோயப் மாலிக்கிடம் செய்தியாளர்கள் இந்தக் கேள்வியை எழுப்பியபோது, அவர், ‘தன் குழந்தை இந்தியக் குடிமகனும் இல்லை, பாகிஸ்தான் குடிமகனும் இல்லை; என்று பதிலளித்தார்.இந்நிலையில் சானியார்-மாலிக் தம்பதியின் குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்