கொலம்பியாவில் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது..!

Default Image

பொலிவியாவில் கல்விக்கான உதவித் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. மாணவர், ஆசிரியர் கூட்டமைப்பினர் நடத்திய பேரணியைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிறிய எறிகுண்டுகளையும், பெட்ரோல் குண்டுகளையும் போலீசாரை நோக்கி வீசினர்.

இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை, போலீசார் கலைத்தனர். இந்த மோதலில் 2 போலீசார் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்