கேரம் உலகக் கோப்பை தொடர் : 2 வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர்….!

Default Image

தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5-வைத்து கேரம் உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த 38 வயதான கே.சகாயபாரதி, அணிகள் பிரிவிலும், ஒப்போன் டபுள்ஸ் பிரிவிலும்  வெள்ளி பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து சகாயபாரதி மட்டுமே இடம் பெற்றிருந்தார். இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் அவர் 4-வது இடத்தில உள்ளார்.

ஓபன் டபுள்ஸ் இறுதி போட்டியில் சகாயபாரதி, ஜாகீர் பாஷா ஜோடி சகநாட்டைச் சேர்ந்த ரியாஸ் அக்பர் அலி, பிரசாந்த் மோரே ஜோடியிடம் 25-4, 5-25, 13-25 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அணிகள் பிரிவில் சகாய பாரதி, பிரசாந்த் மோரே, ஜாகீர் பாஷா ஆகியோரை உள்ளடக்கியேந்திய அணி இறுதி போட்டியில் 1-2 என்ற கணக்கில் இலங்கையிடம் தோல்வியடைந்தது வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இதில் ஜாகீர் பாஷா முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் சகாயபாரதி, பிரசாந்த் மோரே ஆகியோர் வெற்றியை வசப்படுத்தத் தவறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்