கிறிஸ்துமஸ் விழாவை ஜவ்வரிசி பாயாசத்துடன் கொண்டாடுவோம்…..!!!

Default Image

பண்டிகை காலங்களில் பல பலகாரங்கள் இருந்தாலும், பாயாசமும் கூட இருந்தால் பண்டிகையை மேலும் மெருகூட்டக்கூடியது. பாயாசத்தை பல வகையாக செய்யலாம். பாயாசம் செய்வதற்குபல விதங்களில், எளிதாக, ருசியாக செய்யலாம். இப்பொது நாம் ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • ஜவ்வரிசி – 50 கிராம்
  • பால் – 1 கப்
  • ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 7
  • திராட்சை – 7
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை – 50 கிராம்

செய்முறை :
ஜவ்வரிசியை களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் கருகாமல் வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, பிறகு ஊற வைத்து ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இவையெல்லாம் நன்கு வெந்த பிறகு, பால் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து இறக்க வேண்டும். இப்போது சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்