கிரிகெட் போட்டியின் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம்

Default Image

உள்ளூர் கிரிகெட் போட்டியில் பந்து வீசி கொண்டு இருக்கும்போது திடீரென மாரடைப்பால் அந்த இளம் வீரர் உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டி கசர்கோட்டில் உள்ள மஞ்சேஸ்வர் மெய்யபடவு பள்ளியில்  நடைபெற்றது. அப்போது போட்டியின் இறுதி ஓவரை வீசிக்கொண்டிருந்தபோது, பத்மநாபா (வயது 20) என்ற கிரிக்கெட் வீரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இதனை கண்ட சக வீரர்கள் அவரை வேகமாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு  சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே பத்மநாபா உயிரிழந்து விட்டார். இதனை டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக பிரீமியர் லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் சகவீரர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்