காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலன்…12 வருடம் சிறை தண்டனை…!!

Default Image
காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால் ஆத்திரமடைந்த காதலன், காதலியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மாணவன் ப்லூரி. இவர், ஹேயஸ் என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஃப்லூரியை விட்டு பிரிவதாக ஹேயஸ் கூறியுள்ளார். ஆனால், தன் காதலியை முத்தமிட ப்லூரி முயற்சி செய்துள்ளார். அதனை ஹேயஸ் தடுத்தபொழுது, தன் காதலியின் உதட்டை கடித்து துப்பி உள்ளார்.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாய்ப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட தையல்கள் போட்ட மருத்துவர்கள், கடும் சிரமத்திற்கு பிறகு உதட்டை ஒட்டவைத்துள்ளனர்.
பின்னர், காதலியின் உதட்டை கடித்த புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்