கர்நாடகம்:விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடிசெய்ய வேண்டும்..!இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் – எடியூரப்பா..!!

Default Image

விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் வருகிற 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுமென கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய அவர், காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன என்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை பெற்று தாம் தவறு செய்து விட்டதாக அவர் கூறினார்.

விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தும் என்ற அவர், கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாவிட்டால், குமாரசாமி அரசுக்கு எதிராக பா.ஜ.க போராட்டங்களில் ஈடுபடும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்