கனமழை : இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் பலி..!!

Default Image

இலங்கையில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த 16ந்தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழையால் மலை மாவட்டங்களில் பல பகுதிகளில் நில சரிவு எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் பலத்த மழை மற்றும் வேகமுடன் வீசிய காற்றால் 100 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழைக்கு, ஒரே நாளில், 9 பேர் உயிரிழந்தனர்.

கனமழைக்கு இதுவரையில், 20க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். தற்காலிக நிவாரண முகாம்களில் 45 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைக்காரணமாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மழையால் பாதிப்படைந்து உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்