எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்…மேல் முறையீடு இல்லை…டிடிவி தினகரன் பரபரப்பு…!!

Default Image

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த வழக்கை விசாரித்து வந்த 3-வது நீதிபதி சத்திய நாராயணன், தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தார். இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என்றும், தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, இடைத்தேர்தல்களில் டெபாசிட் வாங்க கூட அதிமுக போராட வேண்டி இருக்கும். பட்டாசு விவகாரம் குறித்து தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்