"என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்" – கமல் ஹாசன்

Default Image

தன்னை விலைக்கு வாங்க சிலர் முயன்றார்கள், ஆனால் தாம் விலை போகவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீப்ரியா, சினேகன், முன்னாள் நீதிபதி குருவையா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், “கிராம சபை எனும் பலம் வாய்ந்த ஆயுதம் மக்கள் கைகளில் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும். என்னைப் பார்த்து இனி முழுநேர அரசியல்வாதியா என யாரும் கேள்வி கேட்க வேண்டாம். அரசியல்வாதிகள் என்று கூறுபவர்கள் ரிசார்டில் ஓய்வு எடுத்தார்கள்.

ஊழல் வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது. இங்கு கூடியுள்ள கூட்டம் அன்பினால் கூடிய கூட்டம். இம்முறை நீங்கள் வெல்ல வேண்டும். நான் இன்று மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி வந்துள்ளேன். நீங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. வெறும் நடிகனாக இருந்து செத்து போய் இருப்பேன், என்னைக் காப்பாற்றி விட்டீர்கள்.
உங்கள் பணியில் வாழ்வதுதான் இனி என் வாழ்க்கை. சிலர் என்னையும் விலைக்கு வாங்க முயன்றார்கள் ஆனால் நான் விலை போகவில்லை. அதனால்தான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்’’ என்று பேசினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்