ஊழியரை தாக்கும் பிஜேபி MP வைரலாகும் வீடியோ…

Default Image

மத்திய பிரதேசத்தில் சுங்க சாவடி ஊழியர்களை பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றனமத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 28ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  அங்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் மற்றும் எம்.பி.யாக இருப்பவர் நந்தகுமார் சிங் சவுகான்.  இவர் தனது உதவியாளர்கள் உடன் கார் ஒன்றில் சென்றுள்ளார்.

அவரின் காரை சிவபுரியில் இருந்து குணா சாலை செல்லும் வழியில் பூரன்கேடி கிராமம் அருகே அமைந்த சுங்க சாவடி ஒன்றில் அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், எம்.பி. என்பதற்கான அடையாள சான்றினை காண்பிக்கும்படி அங்கிருந்த ஊழியர்கள் சவுகானிடம் கேட்டுள்ளனர்.  இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வாகனத்தில் இருந்து வெளியே வந்த சவுகான் மற்றும் அவரது உதவியாளர்கள் சுங்க சாவடி காவலர் அஜேந்திரா சிங்கை தாக்கி உள்ளனர்.  அதன்பின் சிங்கை, சவுகான் கன்னத்தில் அறைந்த நிலையில், சவுகானின் உதவியாளர்கள் மற்றொரு ஊழியர் சுபான் தீட்சித் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஊழியர்களின் 2 வாக்கி டாக்கிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.  இந்த சம்பவம் பற்றி எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.  இதுபற்றி, சுங்க சாவடியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்