ஊரூர் -ஒல்காட் குப்பம் விழா சென்னையில் இன்று தொடங்குகியது…!!
ஊரூர்-ஒல்காட் குப்பம் விழா, பெசன்ட் நகரிலுள்ள மீனவர்களால் நடத்தப்படும் கலை விழா. இந்த விழா சுமார் ஒரு மாதம் நடைபெறும். இன்று பெசன்ட் நகரில் தொடங்கும் இந்த விழா நகரில் உள்ள கலை வடிவங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் துறையில் உள்ள பல தடைகளை உடைப்பதற்காகவும் நடத்தப்படுகிறது. இதை பற்றி குப்பத்தில் உள்ள பிரதிநிதி கே. சரவணன், “கர்நாடக இசை பெரிய அளவிலான சபாக்களில் மட்டும் நடக்க வேண்டும் என்று இல்லை. இத்தகைய நிகழ்வுகள் மீன்பிடிக்கும் நகரங்களிலும் நடத்தப்படலாம்” என்று கூறியுள்ளார்.