உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் : கான்சன்மாலா முதல் தங்கம் வென்றார்

Default Image

மெக்சிகோவில் உலக பாரா நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற காஞ்சனமாலா தங்கம் வென்றார். இவர் ரிசர்வ் வங்கியில் வேலை செய்யும் 26 வயதான பெண்மணி ஆவார். இவர் 200.மீ மெட்லே போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்திய வீரர் ஆவார்.

ஆனால், அவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தவறவிட்டார், பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 5 வது இடத்திற்கு வந்தார்.

இது குறித்து காஞ்சன்மலா பாண்டே பேட்டியில் கூறும்போது, ‘நான் உலக சாம்பியன்ஷிப்பை எதிர்பார்த்து நன்கு தயாராகி இருந்தேன். மெக்ஸிகோவில் ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்தேன், ஒரு பதக்கம் கிடைத்தது., உலக சாம்பியன்ஷிப்பில் முதல் நிலை மற்றும் ஒரு தங்க பதக்கம் பெறுவது வியப்புக்குரியது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரத்தில், அதை வார்த்தைகளில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.’ என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்