ஈரானில் 70,000 கைதிகள் விடுவிப்பு… கொரோனா வைரஸ் எதிரொலி… நோய் பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை…

Default Image

ஈரானில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் கொரோனா தாக்கி  21 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை  அங்கு 145 ஆக உயர்ந்தது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,823 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்  நேற்று ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியானது அந்நாட்டிற்க்குஅச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பரவக்கூடாது என்பதற்காக 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் இந்த சூழலில்  சிறைச்சாலைக்கும் பரவினால் உயிரிழப்பு அதிகமாகும் என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்