இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றியது .

Default Image

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை 44.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது . இலங்கை அணியில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 95 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவிற்கு 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 32.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 100ரன்களையும்  ஷிரியாஸ் ஐயர் 65 ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனைபடைத்தது…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்