இன்று 4 வது டெஸ்ட் போட்டி : தொடரை சமன் செய்யுமா இந்தியா….?

Default Image

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடர் சமனாகவும். இங்கிலாந்து வென்றால் அந்த அணி தொடரை வெல்லும். எனவே இந்த பொடியை வெல்ல இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகினறன ஏற்கனவே நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கும் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முரளி விஜய் முதல் டெஸ்ட் போட்டியில் 20 மற்றும் 6 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்கமாலும் அவுட் ஆனதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் குல்தீவ் யாதவ் எதிர்பார்த்தபடி விக்கெட்டுகளை வீழ்த்தாதால் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்