இந்திய விவகாரங்களில் தலையிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை- ஷா முகமது குரேஷி

Default Image

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியுள்ளார்

காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தலைவருடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு அந்நாட்டு தூதரை அழைத்தும் எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை என கூறியுள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, தங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானை குறை கூறுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்