இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கு பல பெண்களுடன் தகாத உறவு ?மனைவி பகீர் புகார்….

Default Image

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மனைவி,அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும்  பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

முகமது சமிக்கும், ஹாசின் ஜஹானுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தமது பேஸ்புக் பக்கத்தில் பல பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்ட ஹாசின் ஜஹான், அந்த புகைப்படங்களில் உள்ள பெண்களுடன் தமது கணவருக்கு தகாத உறவு இருப்பதாக பகீர் புகார் கூறியுள்ளார்.

Image result for Hasin Jahan

அவற்றுடன் முகமது சமி பல பெண்களுடன் சேட்டிங் செய்த விவரங்களையும் புகைப்படம் எடுத்து ஹாசன் ஜஹான் பதிவிட்டுள்ளார். தமது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை, தாம் பரிசாக வழங்கிய அவரது செல்போன் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், இதுதொடர்பாக அவரிடம் கேட்ட போது தம்மை அடித்து துன்புறுத்தியதாகவும் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகள் முகமது சமியின் குடும்பத்தினரால் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்ததாகவும், குடும்பமே சேர்ந்து தம்மை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஷமி மீது காவல்துறையில் புகார் அளிக்கவும் ஜஹான் முடிவு செய்துள்ளார். மனைவி பரபரப்பான புகார் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது வரை முகமது சமி எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இதோ வீடியோ தொகுப்பு ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்