இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண்கள்…! பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சுருட்டியது இந்திய அணி …!!!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சம்பியன்ஷிப்புக்கு கணக்கில் கொள்ளப்படும்.
இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இணையிலான முதலாவது ஒரு நாள் போட்டி காலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 33 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் மன்சி ஜோஷி 3 விக்கெட்டுகளை, கோஷ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 73 ரன்கள் விளாசினார்.