ஆய்வில் அதிர்ச்சி தகவல் …!உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் உணவுப் பற்றாக்குறை ….!உலகிற்கு கடும் எச்சரிக்கை …!

Default Image

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால்  உணவுப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டனில் உள்ள எக்செட்டர் பல்கலைக்கழகமானது, ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 122 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில், பருவ நிலை மாற்றத்தால் உலக அளவிலான உணவுப் பாதுகாப்பில் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வறிக்கையில், பருவ நிலை மாற்றத்தால் மழை பொய்த்தல் மற்றும் கடும் வறட்சி ஏற்பட்டு, பல்வேறு வகையிலான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் பட்சத்தில் 76 விழுக்காடு வளர்ந்து வரும் நாடுகளில்  உணவுப்பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்