ஆசிய போட்டி:படகு போட்டியில் அசத்தி..! துஷ்யந்த் வெண்கல பதக்கம்..!!

Default Image
இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.இன்று  நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பெறும் 11 வது வெண்கல பதக்கம் இதுவாகும்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்