அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய 14 பேருடன் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற எஸ்யூவி கார்!5 பேர் பலி

Default Image

ரோந்துப் படையினர் மெக்சிகோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் காரை  துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Image result for mexico america border illegal entry suv accident

மெக்சிகோவை ஒட்டிய டெக்சாஸ் மாகாண எல்லையில், அமெரிக்க போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 14 பேருடன் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற SUV ரக காரை பார்த்த போலீசார், காரில் செல்வது கடத்தல்காரர்களாக இருக்கலாம் என கருதி, அதை துரத்திச் சென்றனர். சில கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில், அந்த கார் திடீரென நிலைகுலைந்து, சாலையில் தலைகீழாக கவிழ்ந்து பலமுறை உருண்டுள்ளது. இந்த விபத்தில், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறும் நோக்கத்துடன் காரில் பயணித்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்