அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு இன்று தாயகம் திரும்புகிறார் ஓபிஎஸ்!

Default Image

கடந்த 8 ஆம் தேதி 10 நாட்கள் அரசு முறை பயணமாக தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அமெரிக்க பயணம் சென்றிருந்தார். அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கான நிதி குறித்த உலக வங்கிகளிடம் ஆலோசனையையும் மேற்கொண்டதாக சொல்லப்பட்டது.
நவம்பர் 9-ம் தேதி மாலை சிகாகோ தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்பு, 10-ம் தேதி அமெரிக்கன் மல்டி எத்னிக் கொலிஷன் சார்பில் நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார்ஸ் 2019 விழாவில் சர்வதேச வளர்ந்து வரும் தலைவர்- ஆசியா என்ற விருது துணை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது 10 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்து விட்டு, தற்போது தமிழகத்திற்கு திரும்புகிறார் துணை முதல்வர். அவரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்