அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேர் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரங்கல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி கேப்பிடல் கெஜட் என்ற செய்தி நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மேரிலான்ட் மாகாணத்தில் அன்னபோலிஸ் நகரில் செயல்பட்டு வருகிறது.
திடீரென அன்னபோலிஸ் நகரில் தி கேப்பிடல் கெஜட் செய்தி நிறுவனத்தில் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கியால்சரமாரியாக தாக்கினர்.இதனால் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர்.மேலும் இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களுக்காக பிராத்தனை செய்வதாக கூறியுள்ளார்.