அமெரிக்காவில் அகதியாக நுழைய 11 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து…

Default Image

அமெரிக்கா ; இங்கு   எகிப்து மற்றும்  ஈரான், ஈராக், லிபியா, மாலி, சோமாலியா, வடகொரியா, சூடான், சிரியா, ஏமன், தெற்கு சூடான் போன்ற  11 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய  தடைவிதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

தற்போது  இந்த தடை உத்தரவு 120 நாட்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகும் அந்த தடை உத்தரவு முழுமையாக நீக்கப்படவில்லை. எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சீட்டில் கோர்ட்டில் வழக்கு தொடரபட்டுவந்தது .இந்த  வழக்கு நீதிபதியாக  ஜேம்ஸ் ராபர்ட் தலைமையில் இருந்தார்.

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை  நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை . எனவே 11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து  நீதிபதி  உத்தரவிட்டார்.
அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது’ என நீதிபதி ராபர்ட் தனது தீர்ப்பில்  கூறினார்…

 

sources; dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்