டோக்கியோ ஒலிம்பிக்கில் சூப்பர் ஹெவிவெயிட் பிரிவின் குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார், உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வியுற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் போட்டியின் 91 கிலோஎடை பிரிவின், 16 வது சுற்று போட்டிகள் முன்னதாக நடைபெற்றன.இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌனை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
உலகின் நம்பர் 1 வீரர்:
இந்நிலையில்,இன்று நடைபெற்ற காலிறுதியின் 91 கிலோ எடை பிரிவில், உலகின் நம்பர் 1 வீரரான உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜாலோலோவை,இந்தியாவின் சதீஸ்குமார் எதிர்கொண்டார்.
அதன்படி,இப்போட்டியில் முதல் ரவுண்டில் இருந்து சதீஷ் குமார் சற்று சிறப்பாக விளையாடி மூன்று ரவுண்டுகளுக்கு பிறகு குமாருக்கு 27 புள்ளிகள் பெற்றார்.இதனையடுத்து,பகோதிர் 30 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தார்.
போட்டியின் முடிவில் சதீஷ்குமார் 0-5 என்ற கணக்கில் பகோதிர் ஜலோலோவிடம் போராடி தோல்வியடைந்ததை அடுத்து இந்தியாவின் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி இன்று முடிவுக்கு வந்தது. இதனால், ஒலிம்பிக்கில் இப்போட்டியில் பதக்க வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…