சென்னை: டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது. 116 தாலுக்காக்களில் 2,536 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 259 மையங்களில் 78,591 பேர் குரூப்-2 தேர்வு எழுதுகின்றனர். 1,953 காலி பணியிடங்களுக்கு 7,52,916 பேர் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.