தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
நெல்லையில் நடைபெற்ற போட்டியில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் வெங்கட்ராமன் 41 ரன்களும், விவேக் 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய திருச்சி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.