மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடக்கம்!

சென்னை மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடங்கப்படும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சி 2023 – 24ம் பட்ஜெட் கூட்டத்தொடரில், பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் வகையில் ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் பொருட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடங்க உள்ளது. அதன்படி, மக்களை தேடி மேயர் திட்டம் மூலம் ராயபுரம் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற உள்ளார் மேயர் பிரியா.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்