சினிமா துறையை பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி

இயக்குனர் விஜயராகவன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘எவனும் புத்தனில்லை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது பேசியுள்ள அவர், சினிமா துறை பாதிக்கப்படும் போது பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர், இதன் காரணமாக தான் திரைப்படங்கள் சரியாக அமையாமல் போகிறது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.