விழுப்புரத்தில் பரபரப்பு.! 17வயது சிறுமி கர்ப்பம்.! கொன்று புதைத்த கொடூர காதலன்.!

கர்பமாக்கிய காதலனை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமி கொலை செய்யப்பட்டார். வாலிபர் கைது செய்யப்பட்டார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, உள்ள பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின்  கீழ் ஊழியர்கள் வேலை செய்து கொண்டு இருக்கையில் வாய்க்காலுக்காக பள்ளம் தோண்டினர். அப்போது  இளம் பெண்ணின் சடலம்  தெரியவந்தது.

காவல்துறையினர் விசாரணையில் 17 வயது இளம் பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர், அகிலன் என்பவர் இந்த சிறுமியை காதலித்து வந்தது தெரியவந்ததும்  சென்னையில் இருந்த அகிலனை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அகிலன் திடுக்கிடும் உண்மைகளை கூறினார். அகிலனுக்கும் 17 வயது சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால் திருமணம் செய்து கொள்ள சிறுமி கட்டாயப்படுத்தியதால் அவரை கொன்று புதைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அகிலன் மீது போக்ஸோ மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.