viral video: பசியின் கொடுமையால் வீட்டின் சுவரை உடைத்து உணவை எடுத்துக்கொண்ட யானை..!

தாய்லாந்தில் பசியின் கொடுமையால் ஒரு வீட்டின் சுவரை உடைத்து கொண்டு யானை ஒன்று உணவை எடுத்துக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் ஹுவாஹின் பகுதியை சேர்ந்த ஒரு  யானை சுவர் உடைத்து வந்து உணவை உண்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த வீட்டின் பின் பக்க சுவர் ஒன்றை யானை உடைத்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலையில் 2 மணிக்கு நடந்துள்ளது. வீட்டின் சுவர் உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தம்பதியினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது யானை ஒன்று சுவரை உடைத்து உணவை தேடுவதை பார்த்துள்ளார்.

அதனால் இந்த தம்பதி எந்த கூச்சலும் போட்டு அதை துரத்தாமல் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அப்போது அந்த யானை வீட்டில் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுகளை எடுத்து உண்டு அதன் பசியை போக்கிக்கொண்டு அவ்விடத்தை விட்டு சென்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.