மீண்டும் ஒரு கானல் நீர் மாநாடு நடத்தி அதிமுக அரசு ஏமாற்றியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாஜக, அதிமுக ஆட்சிகளில் வரலாறு காணாத அளவிற்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டாத அரசுகளை அகற்ற வேண்டும் வேலையில்லா திண்டாட்டம் 13.6% முதல் 27.2% உயர்ந்துள்ளது.2வது முதலீட்டாளர் மாநாடு என்று மீண்டும் ஒரு கானல் நீர் மாநாடு நடத்தி அதிமுக அரசு ஏமாற்றியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.