முத்தலாக் விவகாரத்தில் அதிமுக “யூ டர்ன்” அடித்தது தவறு – தமிழிசை

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக “யூ அடித்து”  அடித்தது தவறு என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

முத்தலாக் மசோதாவுக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தற்போது வேலூர் தேர்தலை கருத்தில் கொண்டு பின்வாங்கியுள்ளது என்று தமிழிசை கூறி இருக்கிறார். நடக்க இருக்கும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய மக்களின் வாக்கு வங்கிகள் சரிவை நோக்கும் என்று இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அரசு முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் வேண்டி கேட்டு இருக்கிறார்.

கடந்த வாரம் மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு  அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசியுள்ள அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.