தெலுங்கானா வெள்ள நிவாரணம் – நடிகர் மகேஷ் பாபு 1 கோடி நிதி!

தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மக்கள் அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பல்வேறு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ள நிவாரண நிதி திரட்டி வரக்கூடிய நிலையில், திரைப்பட நட்சத்திரங்கள் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வரும் நிலையில் சிரஞ்சீவியும் மகேஷ்பாபுவும் ஒரு கோடி ரூபாயை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். இதுதவிர பல்வேறு நடிகர்களும் லட்சக்கணக்கில் தங்களால் முடிந்த நிதிகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

author avatar
Rebekal