WhatsAppVoiceMessage [Image Source : WhatsApp]
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.
இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை மொபைலில் சேமித்து வைக்கவோ அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ முடியாது. இப்போது இதே அம்சத்தை வாட்ஸ்அப் பயனர்களின் வாய்ஸ் மெசேஜ் அமைப்பிலும் செயல்படுத்தி உள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் வாய்ஸ் மெசேஜையும் ஒருமுறை மட்டுமே கேட்கும்படி செட் செய்து அனுப்ப முடியும்.
அந்த வாய்ஸ் மெசேஜை நீங்கள் கேட்டவுடன், அதை மீண்டும் கேட்க முடியாது. இதன் மூலம் நீங்கள் தவறுதலாக யாருக்காவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டீர்கள் என்றால் இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். வாட்ஸ்அப்பில் உங்கள் சாட்டுகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுவது போலவே, இந்த வாய்ஸ் சாட்டுகளும் பாதுகாக்கப்படும்.
அதாவது இந்த வாய்ஸ் மெசேஜை நீங்களும், நீங்கள் அனுப்பும் நபரும் மட்டுமே கேட்க முடியும். இந்த வாய்ஸ் மெசேஜ்களுக்கான வியூ ஒன்ஸ் அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும், வரும் நாட்களில் உலக அளவில் வெளியாகும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…