அமேசானின் லைவ் ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்ச் நிறுவனம் தற்போது லாபமின்மை காரணமாக 35% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபகாலமாக பல நிறுவனங்களை தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ட்விட்ச் நிறுவனம் இணைந்துள்ளது.
கடந்த 2023 -ஆம் ஆண்டு ட்விட்ச் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மற்றும் தலைமை உள்ளடக்க அதிகாரி உட்பட பல உயர் நிர்வாகிகள் அந்த நிறுவனத்திலிருந்து தங்களுடைய பதவிகளில் இருந்து விலகினார்கள். இவர்கள் பதவிகளில் இருந்து விலகிய பிறகு ட்விட்ச் நிறுவனம் தங்களுடைய வருவாயை இழந்ததாக கூறப்படுகிறது.
1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேடிஎம்! காரணம் இது தான்…
எனவே, நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், 500 ஊழியர்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்கள். கடந்த 2023 -ஆம் ஆண்டு 25,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் ட்விட்ச் நிறுவனம் 35% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ட்விட்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் க்ளான்சி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் இது குறித்து கூறியதாவது ” இன்று எங்கள் பணியாளர்களின் அளவைக் குறைக்க நாங்கள் கடினமான முடிவை எடுத்துள்ளோம். இந்த தகவலை உங்களுக்குத் தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்ச் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டதாவது “திடீரென பணிநீக்கம் குறித்து அறிவிப்பை வெளியீட்டுள்ளதால் என்ன நடக்கிறது என்று உங்களில் பலர் ஆச்சரியப்படுவது எனக்கு தெரிகிறது. ட்விட்ச் நீண்ட காலத்திற்கு இருக்கும் வகையில், ஒரு நிலையான வணிகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனவே செலவுகளைக் குறைத்து பலவற்றைச் மேம்படுத்தவேண்டும் என்று இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்., நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் 500 ஊழியர்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம் என அறிவித்துள்ளனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…