பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் கூகுளை தொடர்ந்து ட்வீட்டர் தளமும், கிரிப்டோகரன்சி (cryptocurrency) எனப்படும் டிஜிட்டல் சொத்து சார்ந்த விளம்பரங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் அதன் தளத்தில் காட்சிப்படும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் சார்ந்த விளம்பரங்களை தடை செய்தது. வஞ்சகமான விளம்பரதாரர்களை எதிர்க்கும் முயற்சியின்கீழ் பேஸ்புக் நிறுவனம், அந்த தடையை அறிவித்தது.
பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கிரிப்டோகரன்சிகள் மீதான விளம்பரங்களை தடை செய்யவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த நிலைப்பாட்டில் தற்போது நியூஸின் படி, ட்வீட்டர் நிறுவனத்தின் புதிய விளம்பரக் கொள்கைகளின்கீழ், ஐஓசி-க்கள், டோக்கன் விற்பனை, மற்றும் கிரிப்டோகரன்சி சார்ந்த விளம்பரங்கள் உலகளாவிய முறையில் தடை செய்யப்படவுள்ளது.
ட்வீட்டர் தளத்தில் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் சார்ந்த விளம்பரங்கள் தடை செய்யப்படும்.
இது க்ரிப்டோகரன்சிகள் மீதான ட்வீட்டர் நிறுனத்தின் முதல் தாக்குதல் அல்ல என்பதும், இதற்கு முன்னர் சிறிய அளவிலான கிரிப்டோகரன்சி கோரிக்கைகளை கேட்கும் ட்வீட்டர் கணக்குகளை நிறுவனம் முடக்கியதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…