ட்விட்டரை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற கடந்த 3 மாதங்கள் கடினமாக இருந்தது என்று எலன் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
உலகின் இரண்டாவது பணக்காரரான எலன் மஸ்க், “டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களில் மேற்பார்வையிடும் பொறுப்புகளை மேற்கொள்ளும்போது போது, திவால்நிலையிலிருந்து ட்விட்டரைக் காப்பாற்ற கடந்த 3 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த வலியை யாரும் விரும்ப மாட்டார்கள்.” என்று கூறினார்.
unknown nodeமேலும் ட்விட்டர் இன்னும் பல சவால்களைக் கொண்டுள்ளது, ஆனால் நாம் அதைக் கடைப்பிடித்தால் இப்போது ஒரு வணிக நடவடிக்கையின் முடிவில் லாபம் அல்லது நஷ்டம் இல்லாமல் “பிரேக் ஈவென்” ஆகும். மக்களின் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. என்று அவர் மேலும் கூறினார். கோடீஸ்வரரான எலன் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்குவதற்காக 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை முடித்தார்.
unknown nodeஇதனையடுத்து வரலாற்றில் 200 பில்லியன் டாலர்களை தனது செல்வத்திலிருந்து அழித்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ட்விட்டரை வாஙகியதில் இருந்தே ட்விட்டர் குறித்து வெளிப்படையாக பேசினார். ட்விட்டர் 12.5 பில்லியன் கடனுக்கான தனது முதல் வட்டியை செலுத்தியது. கடந்த ஆண்டு எலன் மஸ்க் இதனை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டார். இது திவால்நிலையைத் தவிர்க்கும் அவரது திறனின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியது.