தொழில்நுட்பம்

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் டாடா குழுமம்.! அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அமைச்சர்.!

Published by
செந்தில்குமார்

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் ஐபோன்கள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் ஐபோன்கள் பாதுகாப்பிலும், பிரிமியம் டிசைனிலும் கொஞ்சம் கூட குறை வைக்காது. இதனாலேயே அதன் விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அனைவரும் ஐபோன்களை வாங்கி பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனால் ஐபோன்கள் சீக்கிரமாக விறபனையாகிவிடுகின்றன.

எனவே ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களைப் புகுத்தி, பல மாடல்களில் ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஐபோன்கள் இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் அளவை விரைவாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் ஆப்பிள் நிறுவனம் அதன் 7% ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்தது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஏற்றுமதியை சமநிலைக்கு கொண்டு வருவதை ஆப்பிள் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் சீனாவின் தைவானைச் சேர்ந்த வின்ஸ்ட்ரான் இன்ஃபோகாம் என்ற நிறுவனத்தின் ஆலையில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆலையை அக்டோபர் 27 அன்று நடந்த போர்டு மீட்டிங்கில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சுமார் 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது. இதை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் டாடா குழுமம் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் தயாரிக்கத் தொடங்கும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட பிஎல்ஐ (Production Linked Incentive) திட்டம் ஏற்கனவே இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய மையமாக மாற்றியுள்ளது. இப்போது இரண்டரை ஆண்டுகளில், டாடா நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் இருந்து உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஐபோன்களை தயாரிக்கத் தொடங்கும்.”

“விஸ்ட்ரான் செயல்பாடுகளை எடுத்துக்கொண்ட டாடா குழுவிற்கு வாழ்த்துக்கள். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி விஸ்ட்ரான், மற்றும் அதன் தலைமையில் இந்திய நிறுவனங்களுடன் இந்தியாவில் இருந்து உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகவும் நல்லது.”

“மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உலகளாவிய இந்திய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முழு ஆதரவாக நிற்கிறது. அவை இந்தியாவை தங்கள் நம்பகமான உற்பத்தி மற்றும் திறமை பங்காளியாக மாற்ற விரும்பும் உலகளாவிய மின்னணு பிராண்டுகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் இந்தியாவை உலகளாவிய மின்னணு சக்தியாக மாற்றும் பிரதமரின் இலக்கை அடைய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…

20 minutes ago

ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! பெங்களூரு போட்டி இடமாற்றம்.! எங்கு தெரியுமா?

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…

46 minutes ago

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மாற்றம்.! ஃபைனல் எங்கு தெரியுமா.?

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…

1 hour ago

தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? – ஆதவ் அர்ஜுனா கொடுத்த விளக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…

1 hour ago

‘வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் பாதிப்பு’… ஆதவ் அர்ஜுனா காட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…

2 hours ago

நீலகிரியில் வெளுத்து வாங்க போகும் மழை.! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…

3 hours ago