JioTV [File Image]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் பல ஓடிடி (OTT) சேவைகளை அணுக முடியும்.
இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளைத் தங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பார்க்க முடியும்.
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய பிரீமியம் சந்தாத் திட்டங்கள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்களுடன் அன்லிமிடெட் கால், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் 12 முதல் 14 முன்னணி ஓடிடி சேவைகளை வழங்குகிறது. இதில் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை அடங்கும்.
கூடவே Lionsgate Play, Docubay, Hoichoi, Planet Marathi, Chaupal, EpicON போன்ற ஓடிடி சேவைகளும் உள்ளது. புதிய பிரீமியம் திட்டங்கள் ரூ.398 முதல் தொடங்கி, ரூ.1,198 மற்றும் ரூ.4498 விலையில் மொத்தமாக மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் வருகின்றன. இவை அனைத்தும் டிசம்பர் 15 முதல் கிடைக்கும்.
இந்த திட்டம் குறைந்த விலையில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் 12 ஓடிடி சேவைகள் கொண்ட ஜியோடிவி பிரீமியம் போன்றவற்றுடன் வருகிறது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.
இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் 14 ஓடிடி சேவைகள் கொண்ட ஜியோடிவி பிரீமியம் போன்றவற்றுடன் வருகிறது. இதற்கு 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.
இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் 14 ஓடிடி சேவைகள் கொண்ட ஜியோடிவி பிரீமியம் போன்றவை உள்ளது. இத்திட்டத்திற்கு 365 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…