Sim Card Scam [file image]
சிம் கார்ட் மோசடி : சிம் கார்ட் மூலமாக மோசடி நடைபெற்று வருவதால் அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பது பற்றி இதில் பாப்போம்.
பல நூதன முறைகளில் பல மோசடிகள் நம்மை சுற்றிலும் நடைபெற்று வருகிறது. தற்போது, சிம் கார்ட் மூலமாக புதிய வர்த்தக ரீதியான மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயர், உங்களது ஆவணங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் மோசடி செய்து கொண்டு வரலாம். தற்போது அந்த மோசடியை பற்றி தெளிவாக பார்ப்போம்.
நீங்கள் புதிய சிம் கார்ட் வாங்கபோகும் நபராக இருந்தால், வாங்கும் போது மிக கவனமாக இருங்கள். நீங்கள் உங்களது ஆவணங்களை கொடுக்கும் பொழுது குறிப்பாக நீங்கள் கை ரேகை வைக்கும் பொழுது கவனமாக இருங்கள். உங்களை இரண்டு, மூன்று முறை கை ரேகை வைக்கும் படி சொன்னால் ஏன் என கேள்வி கேளுங்கள். ஏனென்றால் உங்கள் கை ரேகையை வைத்தே நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மோசடிகள் நடைபெறுகிறது.
அதாவது நம்மை இரண்டு மூன்று முறை கை ரேகையை வைக்க சொல்லி விட்டு, நாம் கொடுத்த ஆவணங்களை வேறு ஒரு நகலை எடுத்து அதனை பயன்படுத்தி வேறு வேறு கம்பெனி சிம்களில் நமது பெயர்களால் போலியான சிம்கார்ட்டுகளை உருவாக்குவார்கள். அதன் பின் அதனை பயன்படுத்தி போலியான சமூகத்தளங்களையும் உருவாக்கி வேறு ஒருவரை குறிவைத்து நமது பெயரை உபயோகப்படுத்தி மோசடி செய்து கொண்டே இருப்பார்கள்.
மேலும், அந்த சிம் கார்ட் கடை உரிமையாளர் நமது ஆவணங்களை வேறொரு மோசடி கும்பலுக்கு கொடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் சிம் கார்ட் வாங்கும் பொழுதும் ஆவணங்கள் கொடுக்கும் போதும் குறிப்பாக கைரேகையை இரண்டு மூன்று முறை எதாவது காரணம் சொல்லி வைக்க சொன்னாலோ சற்று உஷாராகவே இருங்கள். இதனால் அந்த மோசடி செய்யும் நபர் பிடிபட வாய்ப்புகள் குறைவு தான் அதற்கு பதிலாக உங்கள் பெயரை பயன்படுத்தி அந்த மோசடி கும்பல் மோசடி செய்திருந்தால் நீங்கள் தான் பிடிபடுவீர்கள்.
நமது பெயரையும், நமது ஆவணங்களையும் பயன்படுத்தி வேறு ஏதேனும் போன் நம்பர் செயலில் உள்ளதா என கண்டறிய ஒரு அறிய வழியும் உள்ளது. அதை படிப்படியாக பார்க்கலாம்.
அதனால், இனி நாம் சிம் கார்ட் வாங்கும் பொழுது சற்று கவனமாக வாங்க வேண்டும். மேலும், தேவை இல்லாத இடங்களில் நமது ஆவணங்களை எக்காரணத்தை கொண்டும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…