பிஎஸ்என்எல்(BSNL) இன் புதிய அதிரடி பிளான்.!

Published by
Dinasuvadu desk

 

அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 4 ஜி சேவைகளை (பான்-இந்தியா அடிப்படையின் கீழ்) கேரளாவில் அறிமுகப்படுத்தியுள்ளதென்பதை அனைவரும் அறிவோம். ஆனால், பிஎஸ்என்எல் அதன் 5 ஜி சார்ந்த பணிகளில் மிகத்திவீரமாக ஈடுபட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ஆனது அதன் 4ஜி சேவையின் தொடக்கதையடுத்து நோக்கியா, இசெட்டிஇ, கொரிய நிறுவனம் மற்றுமொரு ஜப்பானை சேர்ந்த நிப்பான் டெலிகிராப் மற்றும் டெலிபோன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 5ஜி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை (பான்-இந்தியா அடிப்படையிலான) தில்லி மற்றும் மும்பை தவிர இதர பகுதிகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் அதன் 4ஜி நெட்வொர்க்குகளை அமைப்பதற்கான உடன் படிக்கைகளை நோக்கியா மற்றும் இசெட்டிஇ நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதும், 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக தொலைத் தொடர்புத் துறை (DoT) நிறுவனத்திடமும் பிஎஸ்என்எல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2100 மெகாஹெர்ட்ஸ் பேண்டில் 5 மெகாஹெர்ட்ஸ் அளவிலான 4ஜி சேவைகளை பயன்படுத்துவதற்கு (ராஜஸ்தான் தவிர்த்து – 800 மெகாஹெர்ட்ஸ்) அரசாங்கத்திடம் பிஎஸ்என்எல் கேட்டுக்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர்  ஸ்ரீவஸ்தவாவைப் பொறுத்தவரை 5ஜி சேவையானது அடுத்த வருடம் இந்தியாவிற்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 4ஜி சேவையை வைத்து ஜியோவுடன் போட்டியிட முடியாதென்பதை நன்கு அறிந்த பிஎஸ்என்எல், தொலைநோக்கு பார்வையுடன் அதன் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளையும் அமைத்து வருகிறது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago