போச்சு போங்க ..!! இனி உங்க போன் நம்பருக்கும் துட்டு கட்டணும் ..பரிந்துரை செய்யும் டிராய்!!

Published by
அகில் R

டிராய்: நாம் இங்கிருந்து, இன்றொருவரை தொடர்பு கொள்வதற்கு ப்ரேதேயேக சிம்கார்டுகளுக்கு சந்தா கட்டுவது போல இனி நம் உரிமை கொண்டாடும் போன் நம்பருக்கும் பணம் செலுத்த வேண்டும் என டிராய், இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாம் உபயோகித்து கொண்டிருக்கும் சிம் கார்டுகளை சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நமக்கு இலவசமாக வழங்கினாலும், அதற்கு மாத சந்தா, வருடாந்தர சந்தா என நம் தேவைக்கேற்ப போன் பேசுவதற்கும், இன்டர்நெட் உபயோகிப்பதற்கும் நாம் தான் பணம் செலுத்தி கொண்டிருக்கிறோம்.

இதன் மூலம் நம்மால் தற்போது மொபைல் இல்லாமலும், இன்டெர்நெட் இல்லாமலும் நம்மால் இயங்க முடியாத அளவிற்கு நம்மை நாம் பழக்கப்படுத்தி விட்டோம். இதனால் மாதமாதமோ அல்லது வருடந்தோறுமோ நாம் குறிப்பிட்ட பணத்தை இதற்காகவே எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டில் டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் (TRAI), நம் இந்திய அரசுக்கு பரிசீலித்து வருகிறது.

இதனால், இது அமலில் வந்தால் நாம் நமது மொபைல் எண்ணிற்கும், நம் தேவைக்கு ஏற்ப தற்போது பேசுவதற்கும், இன்டர்நெட்டுக்கும் பணம் கட்டுவது போல ஒரு பங்கு பணத்தை கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இது ஆரம்பத்தில் நமக்கு கசப்பாக இருந்தாலும் போக போக பழகி விடும் என்பதே நிதர்சனமான உண்மை.

மேலும், இது போன்ற எண்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

10 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

11 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

11 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

12 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

12 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

13 hours ago