உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழுவினர் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை செரிக்கும் என்சைம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், இந்த முயற்சியின் நடுவே ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, பிளாஸ்டிக்கை சிதைக்கும் திறனுடைய மேம்பட்ட ஒரு நொதியை விஞ்ஞானிகள் தற்செயலாக உருவாக்கியிருந்தனர். இந்த ஆராய்ச்சியில் சூரியனை விட ஆயிரம் கோடி மடங்கு பிரகாசமான மற்றும் சக்தி வாய்ந்த எக்ஸ்-ரே கதிர்களை பயன்படுத்தி அந்த நொதியின் முப்பரிமாண வேதி கட்டமைப்பு கண்டறியப்பட்டது.
இதன் தோற்றம், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் காணப்படும் கியூட்டினேஸ் என்ற நொதியை ஒத்திருப்பதாக தெரியவந்தது. ஆனால் திடீர் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்ட PETஏஸ் நொதியின் ஒரு முனைப்பகுதி, கியூட்டினேசுடன் மாறுபட்டு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அந்த மாற்றமே பிளாஸ்டிக் செரிமான திறனுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த குறிப்பிட்ட நொதியின் பிளாஸ்டிக் செரிக்கும் திறனை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு இந்த நுண்ணுயிரி தொழில்நுட்பம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையை ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…