UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?

Published by
கெளதம்

UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI (யுபிஐ) இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண் மூலம், தவறான வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், தவறான நபருக்கு தவறாக அனுப்பப்பட்ட பணத்தை திரும்பப் பெற பலர் முயற்சி செய்திருப்போம். ஆனால், அது எப்படி செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் பலர் உள்ளனர்.

இந்த நிலையில், இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ளும்போது என்ன செய்வது என்று பார்க்கலாம். முன் பின், தெரியாத நபருக்கு அனுப்பட்ட பணத்தை மீட்டெடுக்க, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பரிமாற்றம் தவறானவது என்று  நிரூபிக்கப்பட்டவுடன், அந்த பரிவர்த்தனையைசரி பார்ப்பது வங்கியின் பொறுப்பாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி சொல்வதென்ன 

இந்திய ரிசர்வ் வங்கி இது பற்றி விளக்குகையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஒபட்சு மேன் (Ombudsman) என்ற திட்டத்தின் படி, குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளது. சரியான நேரத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.

ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் iQOO நியோ 9 ப்ரோ.! என்ன ஸ்பெஷல்.?

அதாவது தவறான எண்ணிற்கு UPI மூலம் பணம் அனுப்பினால் புகாரளித்த 2 நாள் (48 மணி நேரத்தில்) பணத்தை திரும்ப பெறலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  அதற்கு, தவறாக பணம் அனுப்பிய பேமெண்ட் விவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்கு எண்களுடன் வங்கியில் புகாரளிப்பது அவசியம்.

UPI பயன்படுத்தப்படும் ஆப்களின் ஹெல்ப்லைன் எண்கள்

Phone Pe -1800-419-0157

Google Pay – 080-68727374

Paytm – 0120-4456-456

BHIM – 18001201740

(NPCI) இடம் புகார் அளிக்கலாம்

UPI மூலம் தவறாக பணம் அனுப்பினால் நீங்கள் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா [National Payments Corporation of India] என்ற இணைத்தளத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் நிரப்பி சமர்ப்பிக்கவும். எல்லாம் சரியாக இருந்தால் பணம் திரும்ப கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago