மனிதனை விட சிறப்பாக சிந்திக்கும் AI.! கூகுள் வெளியிட்ட அட்டகாச அப்டேட்.!

Published by
செந்தில்குமார்

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி 1.0 எனப்படும் புதிய ஏஐ-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய அல்ஃபா கோ (AlphaGo) என்கிற ஏஐ அமைப்பு உள்ளது. ஜெமினி 1.0 மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சி பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் உரை, படங்கள், ஆடியோ மற்றும் பலவற்றை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இதனால் தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். இது கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற சிக்கலான பாடங்களில் விளக்கம் அளிப்பதிலும் சிறப்பாக செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஜெமினி 1.0 மூலம் பைத்தான் (Python), ஜாவா (Java), சி++ (C++)போன்ற உலகின் மிகவும் பிரபலமான கோடிங் மொழிகளைப் புரிந்துகொள்ளவும், விளக்கவும் மற்றும் உருவாக்கவும் முடியும். கூகுளின் ஜெமினி எஐ 1.0 ஆனது ஜெமினி அல்ட்ரா, ஜெமினி ப்ரோ மற்றும் ஜெமினி நானோ ஆகிய மூன்று வெவ்வேறு அளவுகளில் உள்ளது.

இவை ஒவ்வொன்றும் பல சிக்கலான வேலைகளை செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இந்த ஜெமினி எஐ 1.0 கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ கருவியான பார்டில் இயங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பார்ட் தொடங்கப்பட்டதிலிருந்து அதில் செய்யப்படும் மிகப்பெரிய அப்டேட் ஆகும். இது 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்கிலத்தில் கிடைக்கும்.

மேலும் எதிர்காலத்தில் புதிய மொழிகள் மற்றும் பல நாடுகளில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிறகு ஜெமினி நானோ ஆனது பிக்சல் 8 ப்ரோவில் வரவுள்ளது. இது ஜெமினி ஏஐ முதல் ஸ்மார்ட்ஃபோன் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஆகும். ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய ஏஐ அம்சங்களை இயக்குகிறது.

ஜெமினி அல்ட்ரா ஆனது 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில, பார்ட்டில் உட்புகுத்தி பார்டு அட்வான்ஸ் வெளியிடப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் கூகுள் சர்ச், குரோம் போன்ற கூகுள் பயன்பாடுகளில் ஜெமினி ஏஐ-யின் சேவைக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெமினி எஐ 1.0 ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-4 ஐ விட அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Recent Posts

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

23 minutes ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

3 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

4 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

5 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

5 hours ago